Ticker

6/recent/ticker-posts

ஏமனில் மின்சார ஆலைகள் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்: 4 பேர் மாண்டனர்


ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் மாண்டனர்.

ஏமனின் சனா (Sanaa) நகரைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டது.

அதிபர் மாளிகையின் வளாகத்தில் உள்ள ஒரு ராணுவத் தளம் மீதும் 2 மின்சார ஆலைகள், எரிபொருள் கிடங்கு ஆகியவை மீதும் தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.

சண்டையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறிய ஹௌதி, பதில் தாக்குதல் நடத்தப் போவதாகச் சூளுரைத்தனர்.

2023இல் இஸ்ரேல்-ஹாமாஸ் போர் தொடங்கியதிலிருந்து ஹௌதி போராளிகள் இஸ்ரேலை அவ்வப்போது தாக்கியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments