
ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் கோழி குர்மாவில் நஞ்சு கலந்து கணவரைக் கொல்ல முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எரின் பேட்டர்சன் (Erin Patterson) ஏற்கனவே மாமியார் மாமனாரை நச்சுக் காளான் தந்து கொன்றது நீதிமன்றத்தில் நிரூபணமானது.
அவர் கணவரையும் கொல்ல முயன்றதாகப் புது விவரம் இப்போது வந்துள்ளது.
அவருக்கும் கணவருக்கும் உறவில் கசப்பு ஏற்பட்டபின் சுவையான உணவைத் தந்து கணவரைக் கொல்ல முயன்றார் என்பது புதுத்தகவல்.
பேட்டர்சன் 2021-2022க்கு இடைபட்ட காலத்தில் 3 முறை கணவரைக் கொல்ல முயன்றதாகச் சொல்லப்படுகிறது.
கோழி குர்மா சாப்பிட்டபின் கணவர் உடல்நலம் குன்றி சுயநினைவற்ற நிலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பேட்டர்சனின் கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இதற்குமுன் நடந்த விசாரணையின் தொடக்கத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை.
மாமனார், மாமியாரைக் கொன்ற வழக்கில் பேட்டர்சனுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments