
இஸ்ரேலுடன் எந்நேரமும் மீண்டும் போர் தொடங்கலாம் என்று ஈரானின் முதல் துணை அதிபர் முஹம்மது ரேஸா அரேவ் (Mohammad Reza Aref ) எச்சரித்துள்ளார்.
அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ஈரான் தற்போது அதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, அதன் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) ஆலோசகர் தெரிவித்தார்.
ஈரானும் இஸ்ரேலும் தற்போது தற்காலிகமாகத் தாக்குதல்களை நிறுத்தியுள்ளன என்றும் அதனைச் சண்டைநிறுத்தமாகக் கருத முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் சண்டைநிறுத்தம் பற்றி எந்த ஒப்பந்தமும் ஈரான் செய்யவில்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments