Ticker

6/recent/ticker-posts

Ad Code



திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!


தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு நேற்று முன்தினம் (ஆக.30) புறப்பட்டார். பின்னர் ஜெர்மனி சென்ற முதலமைச்சருக்கு டசெல்டோர்ப் விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள், குழந்தைகள், சமூக தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் மலர்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஜெர்மனியில் அவரது பயணத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழ்ச் சங்கங்களால் ஏற்பாடு செய்த நூற்றுக்கணக்கான அயலக தமிழர்கள் கலந்து கொண்ட மாபெரும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சி நேற்று (ஆக.31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இன்று கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இது குறித்து சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், ”பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு. அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr.Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.

சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த 'Cologne Library Visit' அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளது.

kalaignarseithigal

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments