
குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
அன்பே உயிராகும்! அன்பற்ற மேனியோ தோல்போர்வை போட்ட உடம்பு.
குறள் 81:
9.விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.
விருந்தினரைப் பேணி உதவும் பொருட்டே பொருள்சேர்க்கும் இல்லறமாம் கூறு.
குறள் 82:
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
விருந்தினர் காத்திருக்க தான்மட்டும் உண்ணல்
அமிழ்தெனினும் நாம்தவிர்த்தல் பண்பு.
குறள்83:
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.
விருந்தினரைப் பேணுவதால் வாழ்க்கையைத் துன்பம் நெருக்கி அழிப்பதில்லை சாற்று.
குறள் 84:
அகளமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல்.
அகம்மகிழ நாளும் விருந்தோம்பல் செய்யும் அகம்நாடித் தங்கும் வளம்.
குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.
அன்பு விருந்தினர் உண்டபின் உண்பவரின் மண்விளையும் வித்திடாமல் தான்.
குறள்86:
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்தவர் செல்ல வருவோர்க்குக் காத்திருக்கும் பண்பினை வாழ்த்தும் உலகு.
குறள்87:
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தினர்க் கேற்ற சிறப்பின் அளவே விருந்தோம்பல் வேள்விப் பயன்.
குறள் 88:
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.
விருந்தோம்பல் வேள்விப் பயனைப் பெறாமல் வளமிழந்தால் சோகத் துடிப்பு..
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments