Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-18


குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

அன்பே உயிராகும்! அன்பற்ற மேனியோ தோல்போர்வை போட்ட உடம்பு.

குறள் 81:

9.விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

விருந்தினரைப் பேணி உதவும் பொருட்டே பொருள்சேர்க்கும் இல்லறமாம் கூறு.

குறள் 82:

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

விருந்தினர் காத்திருக்க தான்மட்டும் உண்ணல்
அமிழ்தெனினும் நாம்தவிர்த்தல் பண்பு.

குறள்83:

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று.

விருந்தினரைப் பேணுவதால் வாழ்க்கையைத் துன்பம் நெருக்கி அழிப்பதில்லை சாற்று.

குறள் 84:

அகளமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல்.

அகம்மகிழ நாளும் விருந்தோம்பல் செய்யும் அகம்நாடித் தங்கும் வளம்.

குறள் 85:

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்.

அன்பு விருந்தினர் உண்டபின் உண்பவரின் மண்விளையும் வித்திடாமல் தான்.

குறள்86:

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.

வந்தவர் செல்ல வருவோர்க்குக் காத்திருக்கும் பண்பினை வாழ்த்தும் உலகு.

குறள்87:

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.

விருந்தினர்க் கேற்ற சிறப்பின் அளவே விருந்தோம்பல் வேள்விப் பயன்.

குறள் 88:

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்.

விருந்தோம்பல் வேள்விப் பயனைப் பெறாமல் வளமிழந்தால் சோகத் துடிப்பு..

(தொடரும்)


 


Post a Comment

0 Comments