
உளுந்து மாவு கஞ்சி
தேவையான பொருட்கள்:
அரைத்த உளுந்த மாவு -ஒரு கப்
அரிசி மாவு -இரண்டு டேபிள் ஸ்பூன்
ஏலத்தூள் - ஒரு டீஸ்பூன்
சுக்கு பொடி -அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் -3 டீஸ்பூன்
வெல்லம் -பொடித்தது -ஒரு கப்
நெய் -ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி தேங்காய் துருவலை சேர்த்து வறுக்கவும். அரிசி மாவில் தண்ணீர் சேர்த்து கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் வடிகட்டவும். அதே பாத்திரத்தில் வடிகட்டிய வெல்ல கரைசலை ஊற்றி கொதித்ததும் உளுந்த மாவு அரிசி மாவு இரண்டையும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து ஊற்றி அதில் கட்டி படாமல் கலக்கவும்.
மிதமான தீயில் வைத்து மேலும் மூணு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கலந்துகொண்டே இருக்க வேண்டும். நன்கு வெந்து நல்ல மணம் வரும் சமயம் ஏலத்தூள், சுக்குத்தூள், தேங்காய்துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்து இறக்கவும் .சுவையான உளுந்து மாவு கஞ்சி தயார். இடுப்பு வலிக்கு ஏற்றது.
kalkionline

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments