
பார்த்துப் பார்த்து
கண்கள் பார்த்து.
சேர்த்துச் சேர்த்து
கவிதையைச் சேர்த்து
கோர்த்துக் கோர்த்து
இசையைக் கோர்த்து
பாட வந்தேன்
பாடலொன்று
உன்னைக் கண்டு
வேர்த்து வேர்த்து
தேகம் வேர்த்து
வெட்கம் கண்டேன்
உன் பக்கம் வந்து .
பழகிப் பழகிப்
பார்த்துப் பழகி
பாதை வகுத்தேன்
பாவையே என்
காதலுக்கின்று
கனியைப் போலே
சுவைத்துப் பார்க்க
கணிசமான ஆசை
கன்னியே உன்
சிவந்த இதழ் மேலே
கலந்து பேசி
இணைந்து வாழா
கடலைப் போலே ஆசை
உள்ளத்திலே
ஆர் .எஸ் . கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments