
குறள்89:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.
விருந்தினரைப் போற்றாமல் செல்வம் படைத்தோர் வறியோர் அறிவிலி யாம்.
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து.
வாடும் முகர்ந்தால் அனிச்சம்! விருந்தளிப்போர் வேறுபட்டால் வாடும் விருந்து.
10 இனியவை கூறல்
குறள் 91:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
அன்புடன் மாசற்ற உள்ளத்தின் வாய்மையே இன்சொல்லென் றிங்கே உணர்.
குறள் 92:
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்.
முகம்மலர்ந்தே இன்சொல் பேசுகின்ற பண்போ அகங்குளிர ஈவதினும் மேல்.
குறன் 93:
முகத்தான் அமர்ந்தின்து நோக்கி அகத்தானாம் ன்சொலினதே அறம்.
முகம்மலர்ந்து பார்த்தே அகங்குளிரஇன்சொல் இதமாகச் சொல்வ தறம்.
குறன் 94;
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
இன்சொல்லைப் பேசிப் பழகுவோர்க்கோ புண்படுத்த் துண்புறுத்தும் ஏழ்மையில்லை சாற்று
குறன் 95:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற.
பணிவான பண்புகளும் இன்சொல் இயல்பும் அணிகலனாம்! மற்றவை வீண்.
குறன் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
நல்லதை எண்ணியே இன்சொல்லை ன்றவைத்தால் நல்லறம் கூடும் நிலைத்து.
குறன் 97;
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்,
பயன்தரும் சொற்களைப் பேசுவோர்க்கு நன்மை தழைக்கின்ற இன்பம் தகும்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments