
குறள் 98:
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
கடுமையற்ற இன்சொற்கள் எக்காலும் இன்ப நிறைவும் புகழும் தரும்
குறள் 99:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது?
இன்சொற்கள் நன்மை அறிந்தபின்பும் புண்படுத்தும் வன்சொற்கள் பேசுவ தேன்?
குறள் 1௦௦:
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
இனியசொல் உள்ளபோது வன்சொல்லைக் கூறல் கனியிருக்க காய்பறிக்கும் போக்கு.
செய்ந்நன்றியறிதல்
குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.
நன்மையே செய்யாத மாந்தருக்குச் செய்கின்ற நன்மைக்கு ஈடோ உலகு?
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments