Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-21


குறள் 102:

காலத்தி னாற் னாற்செய்த நன்றி ன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் ப் பெரிது.

தேவைக் குரியநேரம் செய்கின்ற சிற்றுதவி ஞாலத்தை விஞ்சும் அளவு

குறள் 103:

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.

பயனெதிர் பார்க்காமல் செய்த உதவி கடலினும் என்றும் பெரிது.

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்.

தினையளவே நன்மை எனினும் பயனால் பனையள வென்பார் மகிழ்ந்து.

குறள் 105:

உதவி வரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி அளவைப் பொறுத்தல்ல ஆனால் உதவிபெற்றோர் பண்பைப் பொறுத்து.

குறள் 106:

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு.

துறக்காதே துன்பம் துடைத்தோரின் நட்பு! மறக்காதே தூயோர் உறவு.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments