Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-9


அடக்கமுடைமை

குறள் மொழி 33

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

குறள் எண்:129

குறள் மொழியின் பொருள் :

நெருப்பினால் சுட்ட புண் வெளியே தழும்பை ஏற்படுத்தினாலும், நாளடைவில் புண் ஆறிவிடும். ஆனால், ஒருவர் நாவினால் சொன்ன சொல்லால் ஏற்பட்ட காயம் வடு மனதில் இருந்து எப்போதும் .ஆறாது.

நபிமொழி:

மனிதர்களின் தவறுகளில் அதிகமானவை அவர்களின் நாவினால் தான் ஏற்படுகின்றன. அது ஆறாத இரணமாக அமைந்து விடுகின்றது.
இறைதூதர் நபி (ஸல்), ஆதாரம்:நூல் - தப்ரானீ : 538

பயனில் சொல்லாமை

குறள் மொழி:34

சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
குறள் எண் : 200

குறள் மொழியின் பொருள் :

ஒருவர் பேசும்போது பயனுள்ள, நல்ல சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும் பேச வேண்டும்; பயனற்ற, பயனில்லாத சொற்களைச் சொல்லாது விடுதல் வேண்டும்.

 நபிமொழி:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பியவர் ஒன்றைப் பேசினால் அவர் நல்லதையே பேசட்டும். 

தீ நட்பு

குறள் மொழி:35

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு.

குறள் எண் :819

குறள் மொழியின் பொருள் :

சில மனிதர்கள் செய்வது வேறாகவும், சொல்வது வேறாகவும் இருக்கும். அப்படிப்பட்ட குணம் உள்ளவர்களின். தொடர்பு என்பது கனவில் கூட துன்பத்தைத் தருவதாக அமையும்.

நபிமொழி :

நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாத காரியங்களைச் செய்ததாகப் பிறரிடம் கூறுவது ஏன்? 
அவ்வாறு செய்வது, சொல்லும், செயலும் வேறுபடுவது அல்லாஹ்விடம் பெரும் பாவமாக இருக்கிறது.

இறைவசனம், திருக் குர்ஆன்: 61:2,3)

(தொடரும்)

 


Post a Comment

0 Comments