
குறள் 126;
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
உறுப்புகளை ஆமை ஒடுக்கிவாழ்தல் போல
புலனடக்கம் மாந்தர்க்(கு) அரண்.
குறள் 127:
பாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
நாவடக்கம் சொல்லடக்கம் இல்லையெனில் சொற்குற்றம்
ஏற்படுத்தும் ஆறாத் துயர்.
குறன் 128:
ஒன்றானுத் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
சொன்னசொல் ஒன்றிலே தீயசொல் வந்தாலும்
நன்சொல் அனைத்துமே பாழ்.
குறன் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
தீப்புண்ணோ ஆறிவிடும் தீச்சொல்லால்
ஏற்பட்ட புண்ணாறா தே.
குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
படித்தும் அடக்கமுடன் கோபமின்றி வாழ்வோர்
வழிபார்த்து மிற்கும் அறம்
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments