Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-5


இனியவை நாற்பது-9.

தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்னினிதே
அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
பங்கமில் செய்கையர் ஆகிப் பரிந்துயார்க்கும்
அன்புடைய ராதல் இனிது.

விளக்கம்:

நம்முடன் அன்பாக இருப்பவர்களுடன் சேர்ந்து வாழ்வது இனிது.
பரந்து விரிந்திருக்கும் வானத்தில் முழு நிலவின் பேரழகைக் காண்பது இனிது.
தப்புத் தண்டா எதுவும் செய்யாமல் எல்லோரிடமும் கருணையோடு இருந்து அன்பு பாராட்டி வாழ்வது மிகவும் இனிது.

இனியவை நாற்பது-10.

கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
மனமாண்(பு) இலாதவரை அஞ்சி அகறல்
எனைமாண்பும் தான்இனிது நன்கு.

விளக்கம்: 

கடன் வாங்கி வாழாமல் இருப்பது இனிது. 
பண்பற்ற பெண்களிடமிருந்து விலகி விடுதல் இனிது. 
கெடுதல் நினைப்பவர்களிடமிருந்து விலகி விடுதல் இனிது. 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments