Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-27


குறள் 136:

ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.

ஒழுக்கம் பிறழ்ந்தால் இழிவென் றறிந்தோர் ஒழுக்கம் தவறமாட்டார் சொல்.

குறள் 137:

ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவ ரெய்தாப் பழி.

ஒழுக்கம் தலைநிமிர வைக்கும்! பிறழ்ந்தால் பழியும் தலைகுனிவும் தான்.

குறள் 138:

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம் நன்மை தருவது! தீயொழுக்கம் அல்லலுக்கு வித்தூன்றும் சொல்.

குறள் 139:

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்.

தவறியும் தீயசொல் சொல்லார் ஒழுக்க நெறிகொண்டு வாழ்வோர்கள் தாம்.

குறள் 140:

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங் கல்லா ரறிவிலா தார்.

உயர்ந்தோர் ஒழுக்கத்தை ஏற்க மறுப்போர் பலகற்றும் கல்லார் உணர்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments