
குறள் 154:
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்.
பொறுமையின் சின்னமாக உள்ளவரை மாந்தர் நிறைகுடம் என்பார் புகழ்ந்து.
குறள் 155:
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
பொறுமை இழந்தோரைத் தூற்றுவார்! என்றும் பொறுத்தாரைப் பொன்னென்பார் இங்கு
குறள் 156:
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ்.
தவறுசெய்தால் தண்டித்தால் கடுகளவே இன்பம்! பொறுத்தாலோ வாழ்நாள் புகழ்.
குறள் 157:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந் தறனல்ல செய்யாமை நன்று.
பழிக்குப் பழியென்று வாழ்தல் மடமை! பழிமறந்து வாழ்வதே பண்பு.
குறள் 158:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தத் தகுதியான் வென்று விடல்.
செருக்குடன் தீங்கிழைக்கும் தீயோரை என்றும் பொறுமையுடன் வெல்தல் எளிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com







0 Comments