
அழுக்காறாமை
குறள் மொழி 54
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
குறள் எண் :165
குறள் மொழியின் பொருள்:
பொறாமை உடையவரைத் துன்புறத்த: அழித்துவிட; தீங்கு தர அவரிடம் உள்ள பொறாமைக் குணம் ஒன்றே போதும். பகைவர் தீங்கு செய்யாவிடினும் அவரது பொறமைக் குணமே அவருக்குத் தீங்கு விளைவிக்கும்.
நபிமொழி:
நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல். பொறாமைக் குணம் ஒருவரது நற்செயல்களைச் சாம்பலாக்கி விடும்.
நூல் அபூதாவூத்ஒழுக்கமுடைமை
குறள் மொழி 55
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
குறள் எண் :131
குறள் மொழியின் பொருள் :
ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பினைக் கொடுக்கும். எனவே ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாகக் கருதிப் போற்ற வேண்டும்.
நபிமொழி :
ஒழுக்கம் அனைவருக்குமானாது. அது அனைத்து நலன்களும் தரும். ஆதலால், "உங்களில் சிறந்தவர் எனப்படுபவர் ஒழுக்கத்தில் சிறந்தவரே!” என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதைப் பேணுங்கள்.
-அண்ணல் நபிகளார் (ஸல்) நூல் : புகாரி
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments