Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-7


இனியவை நாற்பது-13

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே
தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே
ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை
மானிடவர்க் கெல்லாம் இனிது. 

விளக்கம்:

பெருமை எல்லாம் போன பிறகு உயிர் வாழாதிருப்பது இனிது.
பிறருக்கு கொடுத்து வாழ்வதற்கு போதிய அளவு செல்வம் இருக்கும் படி அளவோடு வாழும் வாழ்க்கை இனிது. 
குறை இல்லாத சிறந்த செல்வத்தை மிகுதியாகப் பெற்றிருப்பது  எல்லோருக்கும் இனிது. 

இனியவை நாற்பது-14

குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து
மனனஞ்சான் ஆகல் இனிது. 

விளக்கம்:

சின்னஞ் சிறு குழந்தைகள் தள்ளாடித் தள்ளாடி நடப்பதைப் பார்த்து மகிழ்வது இனிது. 
அவர்களது மழலைச் சொற்களைக் கேட்டு மகிழ்வது அமிர்தத்தை விட இனிது.
தீ வினைகளுக்கு உரிய விளைவு வந்து, துன்பப் படுத்தும் போது அஞ்சாமல் இருப்பது இனிது. 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments