
இனியவை நாற்பது-17
நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்
ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே
பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும்
மெய்த்துணையுஞ் சேரல் இனிது.
விளக்கம்:
நண்பர்களுக்கு உதவுவது இனிது.
யாரிடமும் ஒட்டாதவர்களைக் கூட நண்பர்களாக்கிக் கொள்வது இனிது.
பல கருவிகள் வைத்துள்ள மெய்க் காப்பாளருடன் இணைந்திருப்பது இனிது.
இனியவை நாற்பது-18
மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே
எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக்
கண்டெழுதல் காலை இனிது.
விளக்கம்:
முதிர்ச்சி பெற்றுள்ள பெரியவர்கள் வாழும் ஊர்களில் வாழ்வது இனிது.
அற வழியில் தவ வாழ்வு வாழ்பவர்களின் மாட்சிமை இனிது.
சிறப்பு பெற்ற பெற்றோரை அவர்கள் இருக்கும் இடம் போய் காலையில் வணங்கி மகிழ்வது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments