
ஈரானின் புதிய தலைவராக ஐயதுல்லா மொஜ்தபா கமெனி நியமிக்கப்பட்ட பிறகு, ஈரான் தன்னுடைய முதல் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது என்று அந்நாட்டு செய்தி ஊடகமான IRIB தெரிவித்துதுள்ளது.
இஸ்ரேலில், ஏவுகணை எச்சரிக்கை சிரன் நாட்டின் வடக்கு, மத்திய பகுதிகளான தெல் அவிவ், ஹைபா நகரங்களிலும் ஒலித்தது என்று இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.
இடைமறிப்பு ஏவுகணையின் துண்டுகள் மத்திய இஸ்ரேலில் விழுந்ததாகக் கூறப்பட்டதையடுத்து அதிகாரிகள் மத்திய இஸ்ரேலில் குறைந்தது இரண்டு இடங்களுக்கு அழைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
ஏவுகணைத் தாக்குதலில் பாறை தலையில் தாக்கியதில் ஒரு பெண் காயமடைந்ததாக மேகன் டேவிட் அடோம் அவசர சேவை தெரிவித்துள்ளது.
ஏவப்பட்ட ஏவுகணைகளை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து தாக்குவதாக அறிவித்த பிறகு, நிலைமை இப்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் மக்கள் 'நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தங்குமிடங்களை விட்டு வெளியேறலாம்' என்றும் இராணுவம் கூறியது.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments