Ticker

6/recent/ticker-posts

ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு மோடி துணை நிற்கிறார்: "என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புகழாரம்


ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் (Netanyahu) அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் முன்கூட்டியே அங்கிருந்து தப்பிவிட்டார். 

நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர் நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர் என்று நெதன்யாகு Netanyahu கூறினார்.

இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஈரானில் அமைந்துள்ள துவக்க பள்ளி மாணவிகள் 160 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

nambikkai


 


Post a Comment

0 Comments