
பானந்துறை கடற்பரப்பில் சுமார் 300 பயணிகளுடன் தத்தளித்துக் கொண்டிருந்த ஈரானிய கப்பலில் இருந்த பயணிகளை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றி, அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் பாதுகாப்பாக நங்கூரமிட அனுமதி வழங்கிய இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களுக்கு ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
கடலில் ஆபத்தில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுத்தது மனிதாபிமானத்தின் உயர்ந்த மதிப்புகளை வெளிப்படுத்துகின்றது. இந்நடவடிக்கை மனித உயிர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் இலங்கையின் பொறுப்புணர்வையும் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
மேலும், இந்த செயல் சர்வதேச கடல் பாதுகாப்பு மரபுகளையும் மனிதாபிமானக் கொள்கைகளையும் மதிக்கும் இலங்கையின் நிலைப்பாட்டை வலியுறுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகள் உலக நாடுகளிடையே நல்லுறவையும் மனிதநேயத்தையும் வலுப்படுத்துகின்றன.
எனவே, இந்த உயர்ந்த மனிதாபிமான நடவடிக்கைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எங்கள் ஆழ்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அஷ்ஷேய்க் சதீக் (முப்தி)
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி குருநாகல்
இலங்கை

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments