Ticker

6/recent/ticker-posts

நேரடிப் பேச்சு இல்லை: ஈரான் ஊடகம் தகவல்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் எவ்வித நேரடித் தொடர்புகளோ அல்லது பேச்சுவார்த்தைகளோ முன்னெடுக்கப்படவில்லை என ஈரானின் 'பார்ஸ்' (Fars) செய்தி முகமை தெரிவித்துள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரப்பூர்வத் தகவலை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தச் செய்தியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

ஈரான் நாட்டுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்த போதிலும், இடைத்தரகர்கள் மூலமாகக் கூட அத்தகைய தொடர்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்த ஈரானியத் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேலின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்தே, ட்ரம்ப் தனது தாக்குதல் முடிவிலிருந்து "பின்வாங்கியுள்ளதாக" அந்த அதிகாரி உரிமை கோரியுள்ளார்.

ஈரான் ஊடகத்தின் இந்தத் தகவல் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளை, இந்த விவகாரம் குறித்து ஈரானிய அரசாங்க அதிகாரிகள் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வக் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamilmirror


 


Post a Comment

0 Comments