
ஈரான் மற்றும் அதன் புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தமது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள், அதற்காக நானும் ஒப்புக்கொண்டுள்ளேன்.
எனவே நான் அவர்களுடன் பேசுவேன். உண்மையில் அவர்கள் இந்த முடிவை முன்பே எடுத்திருக்க வேண்டும்.
நடைமுறைக்கு சாத்தியமான மற்றும் மிக எளிதாகச் செய்யக்கூடிய விடயங்களை அவர்கள் மிக விரைவாகவே செய்திருக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் நீண்ட காலம் காத்திருந்து காலத்தை வீணடித்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments