Ticker

6/recent/ticker-posts

ஈரானில் நீண்ட நாட்களின் பின் திறக்கப்பட்ட விமான நிலையங்கள்!


அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பல வாரகால போர்ச் சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பிரதான வானூர்தி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி (Imam Khomeini) மற்றும் மெஹ்ராபாத் (Mehrabad) ஆகிய இரண்டு முக்கிய வானூர்தி நிலையங்களும் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியகிழக்கில் நிலவிய போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வானூர்தி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jvpnews


 


Post a Comment

0 Comments