
குறள் 168:
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
பொருள்:
பொறாமை எனப்படும் பாவி, ஒருவனுடைய செல்வத்தை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவனைத் தீய வழியில் செலுத்தி நரகத்திலும் தள்ளிவிடும்.
குறள் 169:
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.
பொருள்:
பொறாமை கொண்ட நெஞ்சம் உடையவனின் செல்வமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய வறுமையும் (ஏன் இப்படி எனச் சான்றோர்களால்) ஆராயப்படும்.
குறள் 170:
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
பொருள்:
பொறாமை கொண்டு வாழ்ந்தவர்களில் உயர்ந்தவர்கள் யாருமில்லை; அதேபோல், பொறாமை இல்லாதவர்களில் தாழ்ந்தவர்களும் யாருமில்லை.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments