Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-38


குறன் 186:

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும்.

பிறரைப் பழித்துப் புறம்பேசு வோனைப் பிறரும் குறைசொல்வார் கூறு.

குறன் 187:

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்.

அகங்குளிர சேர்த்துவைக்கும் பண்பற்றோர் நாளும் புறம்பேசி தாழ்வார் கலைத்து.

குறள் 188:

துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு.

நண்பரைப் பற்றிக் குறைசொல்வோர் என்னதான் அள்னியரைக் கூறமாட்டார் கூறு?

குறன் 189:

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை.

புறம்பேசு வோரைச் சுமத்தலும் இங்கே அறமென்றே ஏற்கும் நிலம்.

குறள் 190:

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு

மற்றவர் குற்றமுடன் தன்குற்றம் ஒப்பிட்டால் எப்போதும் இங்கே புறங்கூறி வாழமாட்டோம்! துன்பம் விலகும் உணர்.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments