
இனியவை நாற்பது-27
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே
மானம் படவரின் வாழாமை முன்இனிதே
ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை
கோள்முறையாற் கோடல் இனிது.
விளக்கம்:
எல்லாவித உதவிகளையும் செய்பவனின் குணம் இனிது.
மானம் இழந்த பின் வாழால் இருப்பது மிகவும் இனிது.
அடுத்தவர்கள் பற்றி குற்றம் குறை கூறாமல் இருக்கும் உறுதி மிக இனிது.
நல்லவை எதையும் முறைப் படிப் பெறுதல் இனிது.
இனியவை நாற்பது-28
ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.
விளக்கம்:
ஒரு வேலையை செய்யத் தெரியாத நபரிடம், அந்த வேலையைக் கொடுக்காமல் இருப்பது இனிது.
மரணத்தைத் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்து வாழ்வது இனிது.
செல்வத்தை இழந்தாலும் நல்லவை இல்லாத சொற்களைக் கூறாமல் இருப்பது இனிது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments