Ticker

6/recent/ticker-posts

இனியவை நாற்பது-16


இனியவை நாற்பது 31.

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே;
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே;
சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது. 

விளக்கம்: 

நம்மை நாடி வந்தவர்களின் துயரைத் துடைப்பது இனிது. 
செய்ய வேண்டிய செயல்களை கடன் வாங்கியாவது செய்வது இனிது. 
மிகச் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தாலும்,  ஒரு பொருளை நன்றாக ஆராய்ந்த பின்  அதைப் பற்றி பேசுவது இனிது .

இனியவை நாற்பது 32

சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே
பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே
தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப்
பத்திமையிற் பாங்கினியது இல். 

விளக்கம்:

கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிது.
யாரிடமும் பாசத்துடன் வாழாத மன்னன்  கீழ் வாழாமல் இருப்பது இனிது. 
தெரியாமல் கெடுதல் செய்தவர்களுக்குக் கூட பதிலுக்கு  தீங்கு எதுவும் செய்யாமல் அன்புடன் இருப்பது இனிது.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments