Ticker

6/recent/ticker-posts

கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு


அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் பெரிய ரசாயனத் தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளது.

சுமார் 40,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது.

எனினும் ஆயிரக்கணக்கானோர் வெளியேற மறுப்பதாகத் தெரிகிறது.

ரசாயனத் தொட்டியில் 7,000 கேலன் (26,000 லிட்டர்) மெத்தில் மெத்தாக்ரிலேட் (methyl methacrylate) இருந்தது.

பிளாஸ்டிக் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம் எளிதில் தீப்பற்றக்கூடியது.

இந்நிலையில் தொட்டி வெடிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

அப்படி நடந்தால் அதிக மக்கள்தொகை கொண்ட அந்தப் பகுதியெங்கும் நச்சுப் புகை பரவும்.

சுற்றியுள்ள எரிபொருள், ரசாயனத் தொட்டிகளும் பாதிக்கப்படலாம்.

இதுவரை யாருக்கும் காயமில்லை; விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

nambikkai


 


Post a Comment

0 Comments