
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்க ஈரானிய ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் அறிவித்துள்ளார்.
ஈரானின் புதிய முன்மொழிவுகளை குப்பை என நிராகரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்ட ஈரான் உடன்படவில்லை எனில் மிகத்தீவிரமான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.
ஈரானின் துணிச்சலான அறிவிப்பு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் சபாநாயகர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், தவறான உத்திகளும் முடிவுகளும் எப்போதும் தவறான முடிவுகளையே தரும் என்பதை உலகம் ஏற்கனவே உணர்ந்துள்ளதாகவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்தத் துணிச்சலான அறிவிப்பு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments