
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, தெற்கு பிலிப்பைன்ஸின் மின்டானோ பகுதியில் திங்கட்கிழமை 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், அதன் அண்டை நாடுகளான இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
யு.எஸ்.ஜி.எஸ் (USGS) தகவலின்படி, உள்ளூர் நேரப்படி காலை 07:37 மணியளவில் சுமார் 35 கிலோமீட்டர் (21.7 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மிண்டானாவ் தீவின் தெற்கு முனையான சாரங்கானி மாகாணத்தில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரின் கரையோரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் நில அதிர்வு நிறுவனமான பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் வோல்கானாலஜி அண்ட் சீஸ்மாலஜி (பிவோல்க்ஸ்) தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதற்கும் மீட்புப் பணிகளைத் தொடங்குவதற்கும் “சம்பந்தப்பட்ட அனைத்து அரசு நிறுவனங்களையும் உடனடியாகச் செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளதாக” பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்தார்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments