
ஐந்து பள்ளிக்குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால், மருத்துவமனைகள் தங்களின் கொள்ளளவைத் தாண்டி நிரம்பிவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரா, இதுவரை 21 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஐந்து பேர் பள்ளி மாணவர்கள் என்றும் தெரிவித்தார்.
டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து, பொது நிர்வாகம், உள்விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, வரும் 15ஆம் தேதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இது வரும் 20ஆம் தேதி வரை, பொது இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படும்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments