Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-35


அடக்கமுடைமை

குறள் மொழி 86

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.

குறள் எண் : 127

குறள் மொழியின் பொருள் :

ஒருவர் எதைக் காக்காவிட்டாலும் தன்னுடைய நாவைக் காத்தல் வேண்டும். தவறுதலாக தவறான, பொய்யான சொற்களைச் சொல்லிவிட்டால் கூட அதனால் துன்பம் ஏற்படும்.

நபிமொழி:

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுவதற்காக, "இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது என உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யைக் கூறாதீர்கள்! இறைவன் மீது பொய்யைக் கூறுவோர் வெற்றிபெற மாட்டார்கள்.

இறைவசனம்: (திருக் குர்ஆன் - 16:116)

அறன்வலியுறுத்தல்

குறள் மொழி 87

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

குறள் எண் : 40

குறள் மொழியின் பொருள் :

ஒருவன் மேன்மேலும் செய்ய வேண்டியது நன்மை தரும் அறச்செயல்கள் ஆகும். அதுபோல ஒருவன் செய்யாமல் தவிர்க்க வேண்டியது பழிச்செயல்களாகும்.

நபிமொழி

"இன்னும், இன்னும் எப்போதும் நன்மையே செய்யுங்கள். நிச்சயமாக நன்மை செய்வோரை (அல்லாஹ்) இறைவன் மிகவும் நேசிக்கின்றான்.

ஆதாரம் : திருக்குர்ஆன் இறைவசனம் 2: 195.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments