Ticker

6/recent/ticker-posts

பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடும் போட்டி: மக்களுக்கு அழைப்பு


எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி உலக பூனைகள் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பின்னவளை மிருகக்காட்சிசாலையில் உள்ள மூன்று மீன்பிடிப் பூனைக் குட்டிகளுக்குப் பெயரிடுவதற்காகப் பொதுமக்களுக்கான திறந்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விலங்குப் பிரியர்கள் இந்த இளம் பூனைகளுக்குச் படைப்பாற்றல் மிக்க மற்றும் அர்த்தமுள்ள பெயர்களைப் பரிந்துரைக்குமாறு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.

சிறந்த பெயர்ப் பரிந்துரைகள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், வெற்றி பெறுபவர்களுக்கு உலக பூனைகள் தினக் கொண்டாட்டங்களின் போது சிறப்புக் பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பின்னவளை மிருகக்காட்சிசாலையால் பகிரப்பட்ட கூகுள் படிவம் (Google Form) ஊடாகத் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 7, 2026 அன்று நிறைவடையவுள்ளன.

அரிதான மீன்பிடிப் பூனைக் குட்டிகளின் தனித்துவமான ஆளுமைக்குப் பொருத்தமான பெயர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றின் பயணத்தில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு குடும்பங்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு மிருகக்காட்சிசாலை அழைப்பு விடுத்துள்ளது.

tamilmirror


 


Post a Comment

0 Comments