
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
பழியற்ற வாழ்க்கையே வாழ்க்கை, புகழின்
ஒளியற்ற வாழ்க்கை இருள்.
அருளுடைமை
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முன்
பெருஞ்செல்வம் இழோ ரிடத்திலும் உண்டு!
அருட்செல்வம் ஒன்றே சிறப்பு.
குறன் 242:
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃ்தே துணை
பல்வழியில் ஆய்ந்தாலும் வாழ்வில் அருளுடைமை
நல்லதுணை என்றேதான் சொல்.
குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அருள்மனம் கொண்டோர் அறியாமைத் துன்ப
இருளுலகில் வாழமாட்டார் சொல்.
குறள் 244:
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்லுபி ரஞ்சும் வினை.
இங்கே உயிரினத்தைக் காக்கும் கருணைகொண்டோர்
தன்னுயி ரஞ்சமாட்டார் சாறிறு ..
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments