Ticker

6/recent/ticker-posts

காதல் சொல்லும் நேரம்!


கரிசல் மண் வாசனையில்
காற்று வந்து தாலாட்டும்
கறிவேப்பிலை வாசம் போல
காதல் மனசை குளிர்த்திடும்.

அல்லி மலர் புன்னகையில்
ஆத்து நண்டு ஓடி வரும்
ஆலம் விழுது ஊஞ்சலிலே
நாமிருவர் ஆடி மகிழ்வோம்.

தெப்பக்குளம் தண்ணீரிலே
நிழலா நீயும் நான் சேர்வோம்
மஞ்சள் தாவணி கட்டிக்கிட்டு
மாதம் போல நீ வருவாயே.

கறுத்தம்மா பொண்ணு போல
கண்கள் பேசும் உன் பார்வை
நெல்லு மணி சிரிப்பிலே
நெஞ்சம் எல்லாம் நனைஞ்சிடுமே.

கருகமணி சத்தத்திலே
காதல் கதை நான் சொல்வேன்
வெடக்கோழி கூவிடுமே
வெக்கத்தை நீ மறைப்பாயே.

வெட்டருவாள் போல இருந்த
உன் ஒரு பார்வை போதும்
கிழக்கால போன மச்சான்
நான் தான் என்று நீ அறிவாயே.

கொடுத்துக்கோ கொழுந்து வெத்தல
கன்னம் சிவக்கும் சின்ன சிரிப்பு
இரட்ட மாட்டு வண்டி போல
நாமும் சேர்ந்து போயிடுவோம்.

அந்த ஊரின் வயலோரம்
நாமும் சேரும் காதல் பாடல்
கரிசல் மண்ணின் கதையெல்லாம்
உன் பெயரில் நான் எழுதுவேன்.

ஆர் எஸ் கலா


 


Post a Comment

0 Comments