வேட்டை சஞ்சிகை வெற்றிகரமாக ஐந்தாவது ஆண்டையும் தொடுவதையிட்டு மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓர் இணையவழிச்சஞ்சிகை இத்தனை ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவருவது ஆச்சரியம்.
வேட்டையின் வெற்றிக்குக் காரணம் உலகச்செய்திகள் முதல் தரமான பல்சுவை ஆக்கங்களை தாங்கி வருவதுதான் என்றால் மிகையாகாது. இதனாலேயே பல நாடுகளிலும் வாசகர்களைப் பெற்று விளங்குகிறது.சிறந்த எழுத்தாளர்களைக் கொண்டு இயங்குவதோடு வளரும் எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக்கொடுப்பது வேட்டையின் சிறப்பம்சமாகும்.
வாசகர்களின் எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளை பகர்வதோடு வேட்டை சஞ்சிகை மேலும் பல்லாண்டுகள் வெற்றி நடை போட மனப்பூர்வமான வாழ்த்துகள்.
ஷிஹானா மக்சூட் -அக்குறன
கவிஞர். எழுத்தாளர்



0 Comments