Ticker

6/recent/ticker-posts

நிறம்


பசித்திருப்பவனுக்கு 
உணவளிக்கும் போது
அது
வெள்ளை நிறமாகவும்

கோபம் கொப்பளிக்கும்
கொந்தளிப்பான நேரங்களில்
அது
கறுப்பு நிறமாகவும்

பற்றிப் படரும் கொடிகளுக்கு
நீர் வார்க்கும் போது
அது
பச்சை நிறமாகவும்

கொடுமை கண்டு
குமுறும் போது
அது
சிவப்பு நிறமாகவும்

அகம் நிறைந்து
வாழ்த்தும் போது
அது
மஞ்சள் நிறமாகவும்

தன்னை மாற்றிக்கொள்ளும் என்பது 
எனது கற்பனையின் 
அதீத வளர்ச்சியாக 
தென்படலாம்

கூடவே பயணிப்பதால்
ஒன்று மட்டும்
தீர்க்கமாகப் புலப்படுகிறது
"அடிக்கடி நிறம் மாறுகிறது
மனசு...".


Post a Comment

0 Comments