உடலில் அதிக வியர்வை ஏற்படுவது ஏன்?

உடலில் அதிக வியர்வை ஏற்படுவது ஏன்?

என்னுடைய பெயர் முகம்மத், வயது 22. என்னுடைய பிரச்சினை என்னவென்றால் அதிகமாக வியர்வை ஏற்படுவதுதான்.கைகளில், கால் அடிப்பாதங்களில் தலையில் மற்றும் ஏனைய சில பகுதிகளில் அதிகமாக வியர்வை வெளியாகின்றது. கைகளில் வியர்வை ஏற்படுவதால் ஒரு பொருளை நீண்ட நேரம் வைத்துக்கொள்ள முடியாது மற்றும்பிற நபர்களுடன் கைகுலுக்கல் செய்யவும் முடியாத நிலை ஏற்படுகின்றது. தலையும் அதிகமாக வியர்க்கிறது. இவ்வாறான வியர்வை ஏற்படுவது உடலில் அதிகளவு வெப்பநிலை காரணமாகவா? அல்லது ஏதாவது ஒரு நோயின் காரணமாகவா? இந்த வியர்வையை தவிர்க்க ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?
வாசகன்
எமது உடம்பின் தொழிற்பாட்டினால் பலவகையான கழிவுப்பொருட்கள் உற்பத்தியாகின்றன. இக்கழிவுப்பொருட் களை உடம்பிலிருந்து அகற்றுவதற்காக சமிபாட்டுத்தொகுதி, சிறுநீர்த்தொகுதி, சுவாசத்தொகுதி மற்றும் தோல் போன் றவைகள் முறையே மலம், சலம், வெளிமூச்சுக்காற்று, வியர்வை போன்ற வைகளை உற்பத்தி செய்து வெளியேற் றுகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக மேற்கூறிய உறுப்புக்கள் தொழிற்பட்டு உடம்பை ஒரு ஆரோக்கியமான சமநி லையில் வைத்துள்ளன.

தோல் என்பது ஒரு கழிவகற்றும் உறுப்பு என்பது எம் அநேகருக்குத் தெரியாது. எமது உடம்பின் வெப்பநி லையைப் பேணுவதில் தோல் முக்கிய பங்கு வகிக்கின்றது. எமது உடம்பில் வெப்பநிலை கூடும் போது நரம்புத் தொகுதி துரிதமாகச் செயற்பட்டு வியர் வையை ஏற்படுத்துவதன் மூலம் உடம்பு குளிர்ச்சியடைகிறது.

வியர்வை என்பது சிறுநீருக்கு ஒத்த ஒரு கழிவுப்பொருளாகும். ஆனாலும் சிறுநீரில் கழிவுப்பொருட்கள் செறிவாக இருப்பதைப் போன்று வியர்வையில் காணப்படுவதில்லை. எனவே வியர்வை என்பது செறிவு குறைக்கப்பட்ட சிறுநீர் (Diluted urine) என்பது சில சுதேச வைத் திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சாதாரணமாக உடம்பு வெளியேற்றக் கூடிய வியர்வையின் அளவை விடவும் கூடுதலாகச் சுரத்தலை அதிகூடிய வியர்த்தல் நிலை" எனக்கூறப்படுகிறது, இந்நிலை 13 வீதமானவர்களில் காணப் படுகின்றன. அத்துடன் சிறு பிள்ளைகள் வாலிபர்கள் என வயது வித்தியாசமின்றி இந்நிலை ஏற்படலாம்.

அதிக வியர்வை ஏற்படுவது அனே கமான சந்தர்ப்பங்களில் உடம்புக்குப் பாரிய தீங்குகளை ஏற்படுத்தாது. பொது வாக ஒருவருக்குக் காய்ச்சல் அல்லது அதிர்ச்சியுற்ற நிலைகளில் வியர்வை கூடுதலாக ஏற்படலாம்.

இதற்கு மாறாக வேறு சில நோய்க் காரணிகளினாலும் வியர்வை ஏற்படும். முக்கியமாக ஒருவர் ஓய்வாக இருக்கும் போதோ அல்லது தனது அன்றாட வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போதோ அதிக வியர்வை ஏற்பட்டால் உடம்பினுள் ஏதாவது ஒரு நோய் இருப்பதாகச் சந்தேகிக்க வேண்டும். பொதுவாக தைரோயிட் நோய், நீரிழிவு நோய், சுவாச மற்றும் இருதய நோய்கள், ஒருசில தொற்றுநோய்கள், மாதவிடாய் நிரந்தரமாக வராமல் நின்ற நிலை, புற்றுநோய் போன்ற நிலைகள் இருக் கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அத்துடன் அதி உடற்ப ருமன் உடையவர்களுக்கும் பொதுவாக வியர்வை கூடுதலாகவே ஏற்படும். மேற் குறிப்பிட்ட நோய்களில் அதிக வியர் வையுடன் ஒவ்வொரு நோய்க்குமுரிய
ருமன் உடையவர்களுக்கும் பொதுவாக வியர்வை கூடுதலாகவே ஏற்படும். மேற் குறிப்பிட்ட நோய்களில் அதிக வியர் வையுடன் ஒவ்வொரு நோய்க்குமுரிய ஏனைய அறிகுறிகளும் தென்படும்.

அதிக வியர்வை காரணமாக பொதுவாக உடம்புக்குப் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. ஆனாலும் வியர்வை காரணமாக தோல் தொடர்ந்தும் ஈரலிப்புடன் இருப்பதன் காரணமாக கிருமிகளினால் தொற்றுதல் ஏற்பட்டு சொரிச்சல், தொடர்ச்சியாக காயம் ஏற்படல் மற்றும் துர்நாற்றம் போன்றவைகள் ஏற்படுவதனால் இவர்களுக்கு சமூகத்தில் ஒன்றாகக் கலந்து பழகுவதில் பிரச்சினை ஏற்படுவதோடு மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். 

மேலும் நான் மேற்குறிப்பிட்டுள்ள நோய் நிலைகள் இருப்பவர்களுக்கு அதிக வியர்வையின் காரணமாக சில பின் விளைவுகள் ஏற்படலாம்.

யுனானி வைத்திய முறைப்படி உடம்பினுள் ஏற்படுகின்ற அசாதாரண உஷ்ணம் காரணமாகவே அதிக வியர்வை ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக உஷ்ணம் ஏற்படுவதற்கு வெளிக்காரணிகளும் உடம்பினுள் ஏற்படுகின்ற மாற்றங்களும் மன அமைதியின்மையும் தான் முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதிக வியர்வையால் அவதிப் படுபவர்கள் நான் மேற்குறிப்பிட்டுள்ள நோய்களில் ஏதாவது ஒன்றுதானா காரணமெனக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்வது நன்று. இதற்காக வேண்டி சில இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்வது முக்கியம். 

நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் சமிபாடடைந்து குருதிச்சுற்றோட்டத் தொகுதியைச் சென்றடைகின்றன. குருதியிலிருந்தே வியர்வையும் உற்பத்தியாகினறன. 

எனவே நாம் உட்கொள்ளும் உணவு வகைகளும் வியர்வையின் பெளதிகத் தன்மையை நிர்ணயிக்கின்றன. 

எனவே இவர்கள் வெள்ளைப்பூடு, வெங்காயம் போன்ற காரத்தன்மையுடைய உணவு களைத் தவிர்க்க வேண்டும். மேலும் புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன் றவைகளையும் முற்றாகத் தவிர்த்தல் தவிர்க்க வேண்டும் 

அத்துடன் ஆடை வகைகளைத் தெரிவு செய்வதிலும் அவதானத்துடன் இருக்க வேண்டும். 

பருத்தியினால் தயாரிக்கப்பட்ட மெல்லிய இறுக்கமற்ற உடைகளை அணிய வேண்டும்.

மேலும் மன அழுத்தம் ஏற்படாத வகையில் தனது அன்றாட வேலைகளை நிரல்படுத்துவதும் முக்கியம். 

சிகிச்சையைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நோயின் தன்மையைப் பொறுத்தும் வேறுபடும். நவீன வைத்தியத்துறையில் பல சிகிச்சை முறைகள் உள்ளன. அதிதீவிர அல்லது சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாதவிடத்து சத்திர சிகிச்சை முறைகளும் உள்ளன.

யுனானி வைத்தியத்துறையைப் பொறுத்தவரையில் பல வெற்றிகரமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதி உடற்பருமனுடையவர்கள் தனது உடல் நிறையைக் குறைக்கும் போதே வியர்வையின் அளவும் கட்டுப்படும்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது பெண்களுக்கு கர்ப்பிணிக் காலத்தின் போது அதிக வியர்வை ஏற்படலாம். 
இது தாயின் உடம்பினுள் வெப்பநிலை கூடும் போது அது கருப்பையினுள் வளரும் சிசுவுக்கு வெப்பநிலைத்தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கான ஒரு பொறிமுறையாகும். இதன் மூலம் அதிக வியர்வை ஏற்பட்டு உடல் குளிர்ச்சி அடையும். எனவே இது விடயமாக கர்ப்பிணித் தாய்மார்கள் அஞ்சத்தேவையில்லை. 

எனினும் இது விடயமாக உங்களது மகற்பேற்று வைத்திய நிபுணரிடம் கலந்தாலோசிப்பது நன்று.

DR.NASEEM

Post a Comment

Previous Post Next Post