நன்மை செய்தால் நன்மைதான்,!

நன்மை செய்தால் நன்மைதான்,!


அடுத்தவர் உடைமையைப் பறிக்காதே!
குடும்பத்தைக் கெடுத்து வாழாதே!

வக்கிர எண்ணம் வேண்டாமே!
சிக்கல் வலையில் சிக்காதே!

கண்ணீர் சிந்த வைக்காதே!
கண்ணீர் சுட்டுப் பொசுக்கிவிடும்!

ஒழுக்கம் கெட்டால் சீரழிவு!
துரோகம் செய்தால் பேரழிவு!

ஆணவம் கொண்டு துள்ளாதே!
ஆத்திரம் கொள்ளத் துணியாதே!

பழிக்குப் பழியோ எண்ணாதே!
அழிவுப் பாதையில் செல்லாதே!

பொய்மை கயமை வாழ்வானால்
உயர்வே இல்லை தாழ்வுண்டு!

அன்பு பணிவு அடக்கமுடன்
வாழ்ந்தால் நிம்மதி தேடிவரும்!

நேர்மை வாய்மை மனத்தூய்மை
போற்றி வாழ்ந்தால் உயர்வுண்டு!

நன்மை செய்தால் நன்மைதான்!
தீமை செய்தால் தீமைதான்!


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post