நாணி நிற்கிறது சுதந்திரம்!

நாணி நிற்கிறது சுதந்திரம்!


நாணி நிற்கின்றது
நம் நாட்டு சுதந்திரம்!!

நாட்டுப்பற்று உடையோர்
ஆண்டு பல 
போராடிப் பெற்றார்
சுதந்திரம்..
உயிர்களை துச்சமாக்கி..
உறவுகளையிழந்து..

இரவு பகல் 
உண்ணாவிரதமிருந்து
ஆதிக்க வெறியரான 
ஆங்கிலேயரிடமிருந்து
பெற்றெடுத்தார் 
தாய் நாட்டுக்கு சுதந்திரம்..

மக்களுக்கு 
இங்கில்லை சுதந்திரம்..
தாய்க்கு 
எல்லோரும் பிள்ளைகள்..
ஆனால் இங்கு 
பெரும்பான்மைக்கு மட்டுமே 
பெருமை..

சிறுபான்மைக்கு 
மட்டுப்படுத்தப்பட்டது
உரிமை..
சிறுபான்மையை 
வேம்பாக்கி
சட்டங்களும்
சங்கடப் படுத்தின..

கல்வி முதல்
கலாச்சாரம் வரை
வரையறுக்கப்பட்டது..
அழகான தீவுக்குள்
இனவாதம் 
நச்சுப்பாம்பென
நுழைந்து உள்ளே..
நாட்டை 
நரகப் பெருவாளியாக
நொருக்கிப்போனது..

இயற்கையின் அழகு
கெட்டுப் போனது..
நாளை பிறக்கின்றது
விடுதலை..

ஆனால் சண்முகத்தின்
வாயிற்கதவில்
இனவாதம் தலை விரித்தாடுகின்றது..

பாவம் இலங்கை மாதா
நாணி நிற்கின்றாள்..!
பிள்ளைகளின் சண்டையில்
பிடிப்பிழந்து தவிக்கின்றாள்..!


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post