எழுதுவது கடிதம் அல்ல...!

எழுதுவது கடிதம் அல்ல...!


அத்தை பெற்ற 
முத்தான அத்தானே
சித்தம் கலங்க 
சிந்தையிலே ஊறியவனே
ஒற்றையிலே  விட்டு
ஓடித்தான் போனாயே
உன்னை நினைத்தே
ஊமையாக அழுகிறேனே
சத்தமில்லாமல் 
சந்தடி செய்பவனே
சந்திரனாய் ஒளி 
எனக்குத் தந்தவனே
நித்தம் கடந்து நான் புலம்பி
பித்தம் பிடித்துப் 
பிதற்றியே அரற்றுகிறேன்
அன்றாடம் அன்பே 
உன்னை நினைக்கிறேன்
ஆற்றாமையில் கிடந்து 
நிதம் தவிக்கிறேன்
ஆசையில் மடல் 
ஒன்று ஆருயிரே
அன்பாலே மை தடவி, உருகி
எழுதுகிறேன்,
எழுதுவது கடிதம் அல்ல 
என் உயிரின் ஓசைதான் 
அதிலே
ஓசை கேட்டு  ஓடி வந்தே
எனைச் சேரக் 
காதலனே காத்திருப்பேன்
வழிமேல் விழி வைத்து
வாசற்படியில் நானிருப்பேன்

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post