தன்முனைக் கவிதைகள்

தன்முனைக் கவிதைகள்


என்னை மறந்தாலும் 
உன்னை நினைவில் 
வைத்துக் கொள்கிறது 
என்னுடைய நினைவுகள்

ஜன்னலத் திறக்காமலே 
கண்டுகொண்டேன் 
தென்றலாய் மிதந்து வந்து 
நீ கதவுகளைத் தட்டும் போது

உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்

எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்

காலமெல்லாம் ஒரு ரசிகை
எனக்குள் யாசிக்கும் 
சொற்களத் தேர்வு செய்கிறேன்
முனைப்புடன் நிற்கின்றன

நமது கவிதைக்கானகாட்சிகள்
கனியும் காலத்தோடு 
கைகோக்கக் காத்திருப்போம்...
உறவுகளின் ஆலாபனைகள்
தோரணம் கட்டி கொண்டாடும்

Vettai Email-vettai007@yahoo.com  



Post a Comment

Previous Post Next Post