அவனைக் காணுகின்ற
ஆவல் எல்லோரிடத்திலும்
மிகுந்து காணப்படுகிறது.
அவன் வருவதற்கான
அறிவிப்புகள் நெடு நாட்களாய்
வந்த வண்ணமிருக்கின்றன.
நம்மை நெருங்கும் தொலைவில்
அவன் வந்துவிட்டதாகவும்
அதிகாரப்பூர்வமான தகவல்கள்
வந்து கொண்டிருக்கின்றன.
அவன் வருகைக்காகக் காத்திருக்கிறோம்
இன்னும் அவன் வரவில்லை.
இந்தக் கூட்ட நெரிசலில்
அவனைக் காணாமல்
போய்விடுவேனோ என்ற
அச்சம் பீடிக்கிறது என்னில்.
முதலில் அவனைப் பார்ப்பவர்கள்
அவன் குறித்த
அங்க அடையாளங்களையும்
இன்ன பிறவற்றையும்
எனக்கு நிச்சயம் தெரிவியுங்கள்.
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை