வழிமேல் விழிவைத்து காத்திரு!

வழிமேல் விழிவைத்து காத்திரு!


வெண்ணிலா வானத்திடமிருந்து
விடிகின்ற வேளையில்
விடைபெற்று சென்றாலும்
மறுதினமே அதன் வருகை
தொடர்வதில்லையா?

வண்டுகள் பூவிற்குள்
தேன் பருகிச் சென்றாலும்
மீண்டும் பூவைத் தேடி
வருவதில்லையா?

கடலலைகள் கரையை
தொட்டு தழுவி விடைபெற்று
சென்றாலும் மறுநொடியே
மீண்டும் கரையோடு
இணைந்து கொள்வதில்லையா?

நானும் வெண்ணிலாவாக
விரைவில் வருவேன்
நட்சத்திரங்களாக வழிமேல்
விழிவைத்து காத்திரு

கணப்பொழுதில் வரும்
கடலலையாக நான்
கரையிலுள்ள மணலான
உன்னை தழுவுவேன்



Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post