அதிகாலைச் சோலை
அந்தி வானம்
கட்டிலில் மனைவி
தொட்டிலில் பிள்ளை...
அழகுதான்.
உன் குருதி பெற்று,
உயிர் பிழைத்தோன் முகம்...
தேர்விற்கு பணம் பெற்று,
தேறிய ஏழை நன்றி...
அழகுதான்.
உருவப்பசி கொண்ட
சூர்ப்பநகைக்கும்,
உள்ளப்பசி கொண்ட
சீதைக்கும்,
இராமன் அழகுதானே...
அழகு
உருவம் சொல்வதல்ல...
உள்ளம் உரைப்பது
உணர்வில் நிலைப்பது.
அழகற்ற பிள்ளையை
அன்னைகூட சிலநேரம்
அணைக்க மறுப்பாள்.
அழகற்ற பெண்ணை
ஆர்வத்தோடு மணக்கும்
ஆடவர் உண்டோ?
அழகிலா ஆண்டவன்
சந்நதி தன்னை
ஆண்டியும் தரிசிப்பானோ?
எல்லாம்வல்ல அவனுக்கே
இந்நிலை என்றால்...
அழகே தெய்வம்...
அதுவே சத்தியம்
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை