#நீர்த்தேக்கத்தில் கொக்கு
ஒரு கால் தூக்கி
வானில் வட்டமிடுகிறது.
#கடல் அடைந்த பின்னும்
துள்ளும் மீன் வாலில்
நதியின் ஓட்டம்.
#தோளில் சுமை
கைத்தட்டல் வாங்குகிறார்
பொம்மையிடம் ஜவ்மிட்டாய்காரன்.
#இதயத்தில் துளைக்கு
அறுவை சிகிச்சை வேண்டாம்
அவள் வந்துசெல்லும் பாதை.
#தர்கா
எல்லா வித மக்களுக்கும்
அதே மயிலிறகு வருடல் தான்.
#குத்திகுத்தி துலாவிய
குச்சியை பிடித்து வெளியேறும்
உண்டியல் நோட்டில் காந்தி.
#தட்டில் விழவிழ
குரைக்கிறது யாசகனின் நாய்க்குட்டி
மழை ஒழுகும் நிழற்குடை.
#அகல் விற்கும் பெண்
அருகில் செல்ல விடவில்லை
தேங்கியநீரில் நிலா.
#மழைத் தூரல்
ஜன்னலில் மகள் கையில்
பிடித்து விளையாடுகிறாள்
தட்டாம்பூச்சி.
#ஜன்னல் இருக்கை
கையசைக்கிறது ரோட்டோரம்
விற்கும் பொம்மைகளுள் ஒன்று.
#தலைநிமிர்ந்து பார்க்கிறேன்
கோபுர உச்சியை காட்டுகிறது
பட்டாம்பூச்சி.
#விளையாடும் சிறார்களின்
வியர்வையில் குளிக்கிறது
ஆற்றுமணல்.
#மலைஉச்சியில் நிற்கிறேன்
ஊர் எல்லையை வட்டமிட்டு
காட்டுகிறது புகைவண்டி.
#துடைக்க துடைக்க
மூக்குக்கண்ணாடியை புதிதாக்குகிறது
மழைத் தூரல்.
#கோவில் பிரகாரம்
சுற்றிவரும் அவள் கால்களில்
அப்பாடா மெட்டி இல்லை
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை