சேவல்கள் கண் முழிக்காத
முன்னே கண்
விழித்த கண்ணம்மா,
கடிகார முட்களை சரிசெய்து விட்டு
பூஜை அறையில் புகுந்து கொள்கிறாள்,
பூஜை அறையிலிருந்து
ஓலி எழும்புகிறது
பல நாட்களாக ஓடாமல் இருந்த
டேப்ரெக்காட் கந்த சஸ்டி
கவச பாடல்களால்,
நேற்று கண்ணப்பன் நாயுடு
நூறு ரூபாய்க்கு வாங்கி
வந்த மல்லியப்பூ
வாசம் தெருவு
வரைக்கும் வீசுகிறது
சாமி படங்களுக்கு
போட்ட மல்லியப்பூ வாசம்
படுத்து தூங்கும் தாத்தாவின்
தூக்கத்தை கெடுக்கிறது
அதிகாலை வேளையில்,
தாம்பூல தட்டில் ஏற்றப்பட்ட
கற்பூர வெளிச்சத்தோடு
மணி ஓசையும் கேட்கிறது
பூஜை அறையிலிருந்து,
சாப்பிடாத சாமி படத்துக்கு
வைத்து படைத்த அப்பளமும்
வடையும் நமுந்துபோகிறது
கூரையில் ஒழுகிக்கொண்டிருக்கிற
மழைநீரால்
பூஜை அறையிலிருந்து
ஒரே அலரல் சத்தம் கேட்கிறது
""நான் தான் மாரியாத்தா
வந்திருக்கிறேன்"" என்று
தூகிக்கொண்டிருந்த
கண்ணப்பனும் தாத்தாவும்
ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்
திண்னையின் மூட்டை சந்துக்குள்ளே ....!!!
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை