
கவலையே இல்லாத மாந்தரைத் தேடி
அவரிடம் சென்று விசாரித்தேன்! ஆனால்
அவர்கதையைக் கேட்டதும் ஓடினேன் நான்தான்!
இவரென்ன செல்கின்றார் என்றேநான் போனேன்
இவர்கவலை அம்மா! கடலளவு! பார்த்தேன்!
கவலையே இல்லாமல் யாருமில்லை இந்த
உலகத்தில் என்றறிந்தேன் நான்.
வகைவகையாய் இங்கே கவலையை ஏந்தும்
மனிதர்கள் வாழ்கின்றார்! இக்கரைக்குப் பச்சை
நினைக்கின்றார் அக்கரையைப் பார்த்தேதான் மாந்தர்!
மனக்கவலை மாற்றல் அரிது.
Vettai Email-vettai007@yahoo.com


0 Comments