குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-94 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-94 (செந்தமிழ் இலக்கியம்)


வாழ்க்கை வாழ்வதற்கே
“ அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பார் அறிவுத் தாயா ஔவை பிராட்டியார். இறைவன் படைப்பில் மிகவும் உன்னதமான அற்புதமானது, விந்தையானது மனிதப்படைப்பு. ஆம், மனித குலத்திற்கு தான் உரித்தானது வாழ்வு. உலகில் ஆடு, மாடு, கோழி, நாய், யானை,  பூனை இவைதனைப் பார்த்து, என்ன இனிதான வாழ்க்கை வாழ்கின்ற என யாரும்சொல்வதில்லை.

வாழ்க்கை என்பது மனித குலத்திற்கு உரித்தானது. நலமாக, மகிழ்வா ஆனந்தமாக, நிறைவாக வாழும் வாழ்க்கையைத் தான் சொர்க்க வாழ்க்ன என்கிறோம். இதைத்தானே இறைவன் நமக்குக் கொடுத்தான். மனித குல நலமுடன், வளமுடன் மகிழ்வுடன் வாழ இறைவன் பஞ்ச பூதங்களால் ஆ இவ்வுலகையே படைத்து வழங்கி உள்ளான். ஆனால் ஒப்புயர்வற்ற, இணையற்ற, மகிழ்ச்சி ததும்பும் இனிதான வாழ்க்கையை நா வாழ்கின்றோமா? எண்ணிப்பார்த்தால் நமக்கே விளங்கும்.

இதைச் சொல்லும்போது என்றோ நான் படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

அது ஒரு யுத்த காலம். சிறிய விமானமொன்றை மலைவாசி மக்கள் வாழும் ஒரு குக்கிராமத்தில் விட்டுச்சென்று விடுகிறார்கள் சில விமானிகள். படிப்பறிவில்லாத அக்கிராமவாசிகள் அதைப் பார்க்கின்றனர். விமானம் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. இது ஏதோ ஒரு வகை புதுமையான மாட்டு வண்டியாகத்தான் இருக்க முடியும் என்று மாட்டு வண்டியாக அதைப் பயன்படுத்துகிறார்கள் அக்கிராம மக்கள்.

அதே கிராமத்தில் ஒரு படித்த இளைஞன் ஒருவன் அதைப் பார்க்கின்றான். அவன், இது மாட்டு வண்டி அல்ல. காரணம் இதற்கு கியர் இருக்கிறது. சக்கரங்கள் இருக்கின்றன. எனவே இது ஒரு கார் என்று சொல்லி முயற்சி செய்து, அதைக் காரைப் போல பயன்படுத்த ஆரம்பித்தான்.

சில மாதம் கழித்து விமானப் படையில் பணிபுரியும் வீரர் ஒருவர், அதைப் பார்த்து இது மாட்டு வண்டியும் அல்ல ; காரும் அல்ல ; போரில் பயன்படுத்தும் விமானம் என்று கூறினார்.

இன்று உலகில் பெரும்பாலானோர் நமக்குக் கிடைத்த இந்த வாழ்க்கையை மாட்டு வண்டியாகத் தான் கருதுகிறார்கள். சிலர் காராக நினைக்க, மிகச் சிலரே விமானம் என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்கின்றனர். |
ஆம், மனிதர்களும் பயத்தால், கவலையால், பொறாமையால், சந்தேகத்தால், தாழ்வு மனப்பான்மையால் பட்டுப் பூச்சியைப் போல தங்கள் மகிழ்ச்சிக்குத் தாங்களே ஒரு தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதைவிட்டு வெளிவரத்தெரியாமல் தவிக்கிறார்கள்.

விதை வெடிக்கப் பயந்தால் விருட்சம் எழாது. புழு கூட்டைக் கிழித்து வெளியே வர பயந்தால் வண்ணத்துப் பூச்சி வானில் பறக்க முடியாது. நீரில் குதிக்கப் பயந்தால் நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. காற்றைச் சுவாசிக்கப்பயந்தால் உயிர் வாழ முடியாது.

ஏதோ வாழ்கிறோம் என்பவர்கள் மாட்டு வண்டி முதல் ரகத்தினர், ஏதோ பிறரால் முடியாததைச் சாதித்துக் காட்டுபவர்கள் காரோட்டும் 2ஆவது ரகத்தினர். மனித உடலுக்குள் அற்புதங்களும், ஆச்சரியங்களும்

விநோதங்களும் கொட்டிக்கிடக்கின்றன என்பதை அனுபவித்து புரிந்து வாழ்பவர்கள் விமானத்தைப் பயன்படுத்தும் 3வது ரகத்தினர்.

சராசரியாக வாழ்வதா? மகிழ்வுடன் வாழ்வதா? முடிவு உங்கள் கையில் வாழ்க்கை வாழ்வதற்கே!
(முற்றும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post